170 கிலோ கஞ்சாவுடன் யாழ். இளைஞர்கள் மூவர் கைது!

கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் தனியார் பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் மூவர் பாலாவியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ்ஸினுள் 170 கிலோ கிராம் 74 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பபண்ணி கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் (Narcotic) இணைந்து சுற்றி வளைப்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பஸ்ஸினுள் மிதிபலகைக்கு அடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் கேரள கஞ்சா மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட பஸ் ஆகியன புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!