ஆப்பிரிக்காவில் 24 பள்ளி குழந்தைகளை கடத்திய பயங்கரவாதிகள்!

கேமரூனில் பள்ளியில் இருந்து 24 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். ஆப்பிரிக்க நாடான கேமரூனில் தென்மேற்கு ஆங்கிலோபோன் பிராந்தியத்தை தனி நாடாக்க ஆயுதம் ஏந்தி அவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மெமே பிராந்தியத்தில், கும்பா நகரில் உள்ள பள்ளிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 24 குழந்தைகளை கடத்திச்சென்றனர்.

அதைத் தொடர்ந்து குழந்தைகளை கடத்திச்சென்று வைத்திருந்த காட்டுக்குள் ராணுவம் அதிரடியாக நுழைந்தது. அங்கு நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 24 குழந்தைகளையும் ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!