ஐதேக தலைமை குறித்து செயற்குழு வாக்களிப்பு ?

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைக் குறித்து முடிவெடுப்பதற்காக அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பிலேயே இந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, செயற்குழுவில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக அவருக்கு ஆதரவாக பல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஆதரவாளர்களும் செயற்குழுவில் வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!