விக்கியிடம் இருந்து விலகி புளொட்டுடன் ஒட்டும் ஐங்கரநேசன்!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், நாடாளுமன்றத் தேர்தலில் புளொட்டுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் ஒன்றி்ல் போட்டியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தனைத் தொடர்பு கொண்ட தமிழ்த் தேசியப் பசுமை இயகத்தின் தலைவரான பொ.ஐங்கரநேசன் அந்தக் கட்சிக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றைத் தனக்குத் தரும்படி கோரியுள்ளார்.

ஆனால் அதற்கு உடனடியாக எந்தச் சாதகமான பதிலையும் வழங்காத சித்தார்த்தன் தான் கொழும்பில் இருப்பதால் யாழ்ப்பாணம் வரும்போது நேரில் சந்தித்துப் பேசுவோம் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது நம்பிக்கைக்கு உரிய முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என அவர் தனது முக்கியஸ்தர்களிடம் குறிப்பிட்டுளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!