92 வயது மூதாட்டியை கழிவறையில் அடைத்து வைத்து கொடுமை செய்த வளர்ப்பு மகனும், மருமகளும் கைது!

தூத்துக்குடியில் 92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர். கோட்ஸ் நகரைச்சேர்ந்த நிகோலசின். பராமரிப்பில் தாயின் சகோதரியான 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இருந்தார். அவரை சரியாக பராமரிக்காததுடன் இரக்கமில்லாமல் கழிவறையில் தங்க வைக்கப்பட்டு, இரவில் குளிரில் நடுங்கியவாறு இருந்தார்.

இதை அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினரின் நடவடிக்கையால் மூதாட்டியை மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சமூக நலத்துறை அளித்த புகாரின் பேரின், மூதாட்டியை சரியாக பராமரிக்காத நிகோலஸ், அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!