கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 80 பேர் பலி: 700க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள கோரனோ வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்டோருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 பேருக்கு இந்நோய்க்கூறு பரவியதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கோரனோ வைரஸ் பரவிஇருப்பதையடுத்து பல்வேறு விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் குறித்த பதற்றம் பரவி வருகிறது.

வூஹானில் உள்ள அமெரிக்கர்களை சான்பிரான்சிஸ்கோவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை சீன அரசு தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மாணவர்களும் நாடு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நோய் பரவாமல் தடுக்க சீனாவில் இருந்து வெளியிடங்களுக்கு விலங்குகள், இரைச்சி போன்றவற்றை வர்த்தகம் செய்வதற்கும் சீன அரசு தடை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!