340 மில்லியனுக்கு இணங்கிய கப்பல் உரிமையாளரிடம் மேலும் 100.மி.. கோரல்!

சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அம்பாறை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டிமைன்ட் கப்பல் மூலமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 340 மில்லியன் ரூபாவை முழுமையாக வழங்க இணங்குவதாக கப்பலின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபருக்கு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த கப்பல் உரிமையாளரிடம் இருந்து மேலும் 100 மில்லியனை செலுத்த வேண்டும் என்று சட்டமா அதிபரால் குறித்த கப்பல் நிறுவனத்துக்கு இன்று மதியம் அறவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தமாக 440 மில்லியன் கோரப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!