சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை..!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் கர்ப்பிணி பெண்ணிற்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையை நோய் பாதிப்பின்றி வெளியே எடுத்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக கருதப்படும் ஊஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும், குழந்தையை பாதுகாக்கவும் எண்ணிய மருத்துவர்கள் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தை வெளியே எடுத்தனர். அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!