நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது: – ரஜினிகாந்த் வேதனை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்குரியது. அந்த சம்பவம் வேதனையை தருகிறது. இதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!