2,200 ரூபாய் அபராதம் விதித்ததால் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர்!

மதுரையில் போக்குவரத்து விதியை மீறியதன் காரணமாக போலீசார் அபராதம் விதித்ததால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் கூடுதலாக பயணிகளுடன் சென்ற ஆட்டோக்கள், ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் என மொத்தம் 600 ஆட்டோக்கள் சிக்கின. இவற்றிற்கு போக்குவரத்து போலீசாரால் தலா 2,200 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை கட்ட முடியாமல் தவித்த சோலையழகுபுரத்தைச் சேர்ந்த அரிச்சந்திரன் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த 28 ஆம் தேதி அன்று மின்மாற்றியில் கை வைத்து தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அவர், உயிரிழப்பதற்கு முன்னதாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!