உயிரைப் பறித்த ‘பேஸ்புக் ஜூஸ்’!

பேஸ்புக்கில் கூறப்பட்ட ஆரோக்கியத்துக்கான சாறு (ஜூஸ்) பருகிய ஒருவர் கம்பஹாவில் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய அவர் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார். பேஸ்புக்கில் கூறப்பட்ட படி “கஜ மாடரா”மரத்தின் இலைகளை சாறாக பிழிந்து அதனை பருகி வந்ததாக உயிரிழந்தவரின் தாயார் சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் இந்த சாற்றைப் பருகிய 10 நிமிடங்களில் தனது மகன் சுகவீனமடைந்ததாகவும், பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமானதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!