சுவீடன் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞர்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ் இளைஞர், சுவீடன் நாட்டுப் பெண்ணை தாலி கட்டாமல், மாலை மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணம் செய்தார். சாணார் பாளையத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் தரணி. இவர் சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் எம்எஸ் படித்த போது அந்நாட்டைச்சேர்ந்த இளம்பெண் மரினா சூசேன் என்பவருடன் நட்பாக பழகி காதல் மலர்ந்தது.

இருவரும் திருச்செங்கோட்டில் இன்று திருமணம் செய்துகொண்டனர். மணமகன் இந்து என்றாலும் சுயமரியாதை கொள்கையுடையவர் என்பதால் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டாமல், செயின் மற்றும் மாலைகள் மட்டும் மாற்றிக்கொண்டு சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது. முன்னதாக கிறிஸ்தவ வழக்கப்படி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்து வழக்கப்படி மணமகனின் பெற்றோர் சம்பிரதாயங்கள் செய்ததுடன் அட்சதை தூவி வாழ்த்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!