மற்றொரு சீனருக்கு கொரோனா அறிகுறி!

மாத்தறையில் – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு பணியில் ஈடுபடும் சீன நாட்டவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் காணப்படுவதனால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சீன நாட்டவர் சூரியவெவ நவதகஸ்வெவ பகுதியில் சேவை செய்யும் போது திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.குறித்த சீன நாட்டவரின் நிலைமை தொடர்பில் கண்கானிப்பதற்காக அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!