வவுனியா கோர விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம்! – வாகனங்கள் தீக்கிரை

வவுனியா- ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்றிரவு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் வரை காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து,பேருந்துக்கு சிலர் தீ வைத்த நிலையில் விபத்துக்குள்ளான வானும், தீயில் எரிந்து நாசனமாகியது. இதன்போது வான் சாரதியும் தீக்கிரையாகியுள்ளார்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இபோச பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வானுமே விபத்துக்குள்ளாகின. இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. விபத்துக்குள்ளாகிய வானும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வானுக்கு இருந்த சாரதியும் தீயில் எரிந்து போன நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில், அம்புலன்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்ட நிலையில் ஓமந்தை பொலிஸார விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!