ஐதேகவுடன் மீண்டும் கை கோர்க்கமாட்டோம்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

‘கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மத்திய குழு ஆகியவை ஐ.தே.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்தது. இதுவே நாங்கள் செய்த ஒரு வரலாற்று தவறு.

பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவரை சஜித் பிரேமதாச தலைமையிலான தனது புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு கடந்த சில திங்களுக்கு முன்னர் ஐதேக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கட்சியின் சில உறுப்பினர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு தங்கள் இணங்கவில்லை என்றாலும், ஒருபோதும் சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்காது என்று ஜயசேகர கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!