இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

உலகின் 68 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை 3,000 கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ள நிலையில், இந்தியாவில் முதன் முறையாக இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. சீனாவை அடுத்து தற்போது தென் கொரியா, ஜப்பான், இத்தாலி என பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தலைநகர் டெல்லி மற்றும் தெலங்கானா மாநிலத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுள்ளது.

இதில் ஒருவர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் என கூறப்படுகிறது. தற்போது இருவரும் சிகிச்சையில் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கேரள மாநிலத்தில் மூவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் மூவரும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!