நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தமக்கு நாடாளுமன்ற பலம் வேண்டும்

நாட்டு மக்களுக்கு சிறந்த விடயங்கள் இடம்பெற வேண்டும் எனில், ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிக்கு நாடாளுமன்ற பலம் கிடைக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வாரியபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு நாடாளுமன்றப் பலம் வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் வெவ்வேறாக சென்று, கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட விடயங்களே மீண்டும் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், இந்த நிலையில், நாட்டு மக்களுக்கே பாதிப்புகள் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபியின் கட்சிக்கு அரசாங்கத்தை வழங்குவதன் ஊடாகவே, நாட்டை சிறந்த நிலைமைக்கு முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!