தவராசாவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசாவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் முதலிடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பெயரை இடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!