ஈரானை வாட்டி எடுக்கும் கொரோனா: பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது. இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நாட்டில் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!