பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதால் நாடு எந்த பயனையும் அடையாது என இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களான மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது புத்த சாசன, மதம், தர்மம் மற்றும் பௌத்த பரம்பரையின் பெரும் சரிவுக்கு வழிஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் திருத்தப்பட்ட மார்ச் 12 அறிக்கையினை மகாநாயகர்களுக்கு கையளித்த போதே, ​​அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!