வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 19ஆம் திகதி பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள். 19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!