திருமண விழாக்களில் பங்கேற்போரை மட்டுப்படுத்த அறிவுறுத்தல்!

திருமண நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வுகளுக்கு குறைந்தளவிலானோரே பங்கேற்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைதானங்களில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக அனுமதி வழங்க கூடாதென அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!