கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகள் வரத் தடை! – வெளியேற அனுமதி

வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது நாளை நள்ளிரவு முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இலங்கையில் பரவி வருவதன் காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கட்டுநாயக்க விமாக நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளும் விமானங்கள், சரக்கு மற்றும் இடைத்தங்கல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!