கொரோனா தொற்று: இந்தியாவில் பதிவான மூன்றாவது பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். உலகை உலுக்கியுள்ள கொரோனா வைரஸால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரையில் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த 64 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மும்பையின் கஸ்துர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!