விடுதலை செய்யப்பட்டார் சுனில் ரத்நாயக்க!

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் மேடைகளில் வாக்குறுதியளித்திருந்தார்.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 2000 ஆம் ஆண்டு எட்டுப் பேரை படுகொலை செய்த வழக்கு 13 ஆண்டு காலமாக இடம்பெற்று வந்தது. இந்த நிலையில் படுகொலை வழக்கில் சுனில் ரத்நாயக்கவுக்கு கடந்த 2015 ஆண்டு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!