தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் வீடு திரும்பினர்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்றையதினம் மேலும் 223 பேர் வீடு திரும்பினர்.

மட்டக்களப்பு புனானையில் 125 பேரும், பொலன்னறுவை, கந்தக்காட்டில் 42 பேரும், தியத்தலாவையில் 38 பேரும், மியங்குளத்தில் 18 பேரும் என நான்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலும் மொத்தமாக 223 பேர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் இராணுவ பஸ்களில் தத்தமது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!