தியத்தலாவ முகாமில் இருந்து 309 பேர் இன்று விடுவிப்பு!

இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே இவ்வாறு தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!