உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் பரவியவர்களி எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 96 ஆயிரத்து 66 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!