இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை சடுதியாக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேர் நேற்று மாத்திரம் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதையத்து இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாத அடையாளம் காணப்பட்ட 14 பேர், ஏற்கனவே கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் புனானை , பலாலி முழங்காவில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களல் இருந்தவர்களாவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!