“கொரோனா பரவலை தடுப்பதில் இந்தியா நிலை குலையாத உறுதியை வெளிப்படுத்தி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

இந்தியாவில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டொக்டர் பூனம் கேத்திரபால் சிங் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க இது வசதியாக அமையும்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கும், அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற தடத்தை கண்டறிவதற்கும், சுகாதார நடவடிக்கைகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 வார கால அளவுக்கு இந்த ஊரடங்கு செல்கிறது.

மிகப்பெரிய, கடினமான சவால்களுக்கு மத்தியில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் இந்தியா நிலை குலையாத உறுதியை வெளிப்படுத்தி உள்ளது. ஒரு சோதனையான காலத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களை சார்ந்திருக்கிறது. சுகாதார பணியாளர்களை சார்ந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை செய்து இந்த வைரஸினை வீழ்த்த வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!