மேலும் எண்மருக்கு கொரோனா

இலங்கையில் இன்று (20) மேலும் 8 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக இன்று காலை கொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 24 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இன்று இதுவரை 32 பேருக்கு தாெற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை நேற்றும் அதே பகுதியை சேர்ந்த தனிமை மையத்தில் இருந்த 17 பேருக்கு தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 199 ஆக காணப்படுகிறது.

தொற்றுக்கு உள்ளானோர் 303
இப்போது சிகிச்சை பெறுவோர் 199
குணமடைந்தோர் 97
இறப்புக்கள் 07
யாழ்ப்பாணம் – (பாஸ்டருடன் தொடர்புடையோர்) 17
காெழும்பு 101
களுத்துறை 45
புத்தளம் 35
கம்பஹா 32
தனிமை மையங்கள் 38

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!