கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களது எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 98 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!