தண்டனை பெற்றுக்கொடுக்கும் வரை அமெரிக்கா ஓயாது!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான கொடுமைகளை செய்பவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதில் அமெரிக்காவும் ஓய்வெடுக்காது என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களில் தப்பியவர்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும், அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கை நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் சேர்ந்து, சிவில் உரிமைகளை மதித்து, அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், பரஸ்பர உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்திற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்குமான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!