சரத் பொன்சேகாவின் பதவியைப் பறித்தார் ரணில்!

ஐக்கிய தேசிய கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகா, இணைந்தமையினால் ஐக்கிய தேசிய கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!