நாடாளுமன்றத்தை கூட்டப் போவதாக வெளியான தகவல் வதந்தி- கரு ஜயசூரிய தெரிவிப்பு

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு தன்னால் தன்னிச்சையாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மறுத்துள்ளார்.

இவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே 08 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய, தான் நாடாளுமன்றத்தை ஒரு தலைப்பட்சமாக கூட்டப்போவதாக பரவும் வதந்தி பொய்யானது என தெரிவித்துள்ளார்.

தேர்தல் திகதி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தாது, அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும். இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மையை பாதிக்கக்கூடியது. உண்மையான நம்பிக்கையுடன், இலங்கையில் கொவிட்-19 நோயை, எவ்வித அரசியலும் இன்றி, சுகாதார மற்றும் பொருளாதார சவாலாகக் கருதி கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!