இராணுவ முகாம்களாகும் பாடசாலைகள்!

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக பயன்படுத்தப் போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகளை தனிமைப்படுத்தும் நிலையங்களாக பயன்படுத்தபோவதாக பரவிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. விடுமுறையில் சென்றுள்ள படையினர் மீள அழைக்கப்பட்டுள்ளதால், சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதற்காக, சிறிய முகாம்களை அமைப்பதற்காக அண்மித்துள்ள பாடசாலைகள் சிலவற்றை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளோம்.இதற்கு அனுமதி கிடைத்துள்ளபோதிலும், அவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்த போவதில்லை என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!