நாடாளுமன்றத்தைக் கூட்டும் யோசனைக்கு சபாநாயகர் ஆதரவு!

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

“நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும்” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தினை உடன் கூட்டுமாறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!