யாழ். பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று என 13 ஏப்ரல் உறுதிப்படுத்தபட்டவர்.)

அதேவேளை, ஏனைய பரிசோதனைக்கு உட்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!