மிருசுவிலில் ஒருவர் வெட்டிக் கொலை – நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணம்- மிருசுவில், கரம்பகம் பகுதியில், நேற்றிரவு நடந்த மோதல் ஒன்றில், ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மிருசுவில், கரம்பகம் பகுதியில், நேற்று இரவு 7.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மிருசுவில் மருதங்குளத்தை சேர்ந்த இராஜகோன் சிவகுமார் (40-வயது) என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த இரண்டு பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் இருவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40-வயதுடைய தர்மகுலசிங்கம் கிருபாகரன், 30 வயதுடைய தர்மகுலசிங்கம் விஜயகுமார் , 27 வயதுடைய தர்மகுலசிங்கம் சிந்துஜன், 27 வயதுடைய சிவகுமார் சுஜிதா (27-வயது) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். உறவினர்களுக்கு இடையிலான மோதலே, இந்த வாள்வெட்டுச் சம்பவத்துக்குக் காரணம் என்று கொடிகாமம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!