பொலிசாரை ஏய்த்து விட்டு நேற்றும் சுடரேற்றிய மாணவர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலின் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று இரவு 7 மணியளவில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக முகாமைத்துவ பீட நுழைவாயிலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக, நேற்று மாலை தொடக்கம், யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் 20இற்கும் அதிகமான பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில், மாணவர்கள் முகாமைத்துவ பீட நுழைவாயிலில் சுடரேற்றி, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!