த.தே.ம.மு தலைவர்களை தனிமைப்படுத்தும் உத்தரவை மீளப் பெற்றது நீதிமன்றம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய உத்தரவை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியதாக தெரிவித்து கஜேந்திரகுமார் உட்பட 11 பேரை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த நேற்று (17) யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முன்னணியினரால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அதனை ஆராய்ந்த நீதிமன்றம் உத்தரவைமீளப் பெறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!