எந்தச் சூழலிலும் தாக்குதலை நிறுத்தக் கூடாது! – வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு

எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை கைவிட வேண்டாம் என்று, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தன்னிடம், அறிவுறுத்தினார் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு சிறந்த மற்றும் துணிச்சலான தலைவர் கிடைத்திருக்காவிட்டால் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது. மூன்று தசாப்த கால யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது.

ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 2009 மே 16,அன்று என்னை அழைத்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை கைவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

அந்த நேரத்தில் ஈரானில் இருந்த ராஜபக்ச, போர்க்களத்தில் சமீபத்திய நிலைமை குறித்து விசாரிக்க என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார்.

ஐரோப்பிய நாடுகளால் கொடுக்கப்பட்ட ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, புலிகள் மீதான இராணுவத் தாக்குதலை மீண்டும் ஒரு முறை கைவிட பாதுகாப்புப் படைகள் கட்டாயப்படுத்தப்படுமா என்று நான் அவரிடம் கேட்டேன்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி, தனது திறமையான தலைமைத்துவத்தின் மூலம், பாதுகாப்பு படையினருக்கு விடுதலைப் புலிகளை அழிக்க தேவையான சூழலை உருவாக்கியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!