வடக்கில் தொடரும் ரிஐடியினரின் விசாரணைகள்!

முல்லைத்தீவு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழு தலைவர் தம்பையா யோகேஸ்வரன் பணிக் குழு செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஆகியோரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்

நேற்று முற்பகல் 11. 30 மணியளவில் பணிக் குழு தலைவருடைய இல்லத்திற்கு வருகை தந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், பணிக் குழு தலைவர் தம்பையா யோகேஸ்வரன், பணிக் குழு செயலாளர் சுந்தரலிங்கம் யோகலிங்கம் ஆகியோரிடம், சுமார் நான்கு மணி நேரமாக விசாரணை நடத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம், மன்னாரில் மாவீரர் நாளை ஒழுங்கு செய்தமை தொடர்பாக சிவகரனிடம் இரண்டு மணிநேரம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!