நாடு முழுவதும் ஊரடங்கு!

எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

25ம் திகதி ரமழான் பண்டிகை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 23ம் திகதி இரவு 8 மணி முதல் 26ம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகவுள்ளது.

இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு அமுல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!