கட்டாரில் இருந்து இலங்கையரை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை இன்று அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது என, சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், ஓய்வு பெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அண்மையில் குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த இலங்கையர் பலருக்கு கொவிட்-19 நோய் இருப்பது அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குவைத் மற்றும் கட்டாரிலிருந்து வரவிருந்த விமானங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படடுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று காலை விசேட விமானத்தின் மூலம் 273 இலங்கையர்கள் கட்டாரிலிருந்து வரப்படவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!