இன்று 17 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (26) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கண்டறியப்பட்ட 17 பேரும் குவைத்தில் இருந்து அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 477 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!