முகமாலையில் சோதியா படையணியின் மூத்த போராளியின் உடல் எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது, பெண் போராளி ஒருவரது உடல் எச்சங்கள், ஆயுதங்கள் மீட்கப்பட்டடுள்ளன.

அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது புகைப்படம், T-81 ரக துப்பாக்கிகள் 3, துப்பாக்கி ரவைகள் 75, கை குண்டுகள் 2, த.வி.பு ஞா 0164 இலக்க தகடு, சீருடை, 8 ரவை கூடுகள் என்பனவும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட மனித எச்சம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் படைப் பிரிவான சோதியா படையணியைச் சேர்ந்த மூத்த பெண் போராளி ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத்தொடந்து ஜூன் 2ம் திகதி வரை அகழ்வு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!