மும்பை, மெல்பேர்னில் இருந்து 304 பேர் அழைத்து வரப்பட்டனர்!

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 304 பேர், இன்று அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். சிறிலங்கன் விமான சேவையின் விசேட விமானங்கள் மூலம் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகரிலிருந்து 18 பேரும், அவுஸ்திரேலியா- மெல்பேர்ன் நகரிலிருந்து 286 பேரும் நாடு திரும்பியுள்ளனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!