கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த நோயாளி…

எகிப்து நாட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து நோயாளி ஒருவர் கரம்பிடித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதனால் பாடசாலை, கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திருமணங்கள், விழாக்கள் என அனைத்தும் முடங்கிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் எகிப்து நாட்டில் அரங்கேறிய காதல் ஒன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Mohamed Fahmy என்ற இளைஞர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சையளித்து வந்த Aya Misbah என்ற இளம் மருத்துவர் மீது முகமது பாமி காதல் வலையில் விழுந்துள்ளார்.

சுமார் இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த முகமது பாமி திருமணம் செய்து கொள்ளும் தமது விருப்பத்தை மிஸ்பாவிடம் தெரிவிக்க இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார் அந்த இளம் மருத்துவர் மிஸ்பா.

இந்த விவகாரம் சமூகவலைதள பக்கங்களில் வெளியாக தற்போது அது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!