கிம் அமெரிக்கா செல்ல திட்டம்

ட்ரம்பின் அழைப்பை ஏற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா விருந்தகத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிம் ஜாங் உன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அதேபோல் ட்ரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், ட்ரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!